Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

நீராம்பல்
-5 %
முகமும் பெயரும் அடையாளமும் அறியாமல் கங்காவின் கவிதைகளை முதலில் வாசித்தேன். சிங்கப்பூர் தங்க முனை விருதிற்குரிய போட்டியில் வாசிக்கக் கிட்டியவை கங்காவின் கவிதைகள். சொற்செட்டும் புதிய படிமங்களும் புலம்பெயர்ந்தாலும் புலத்திலிருந்து இடையறாமல் தவிக்கச் செய்கின்ற நுண்ணுணர்வும் மாறிமாறி நெய்கிற கவிதைகள் அவ..
₹95 ₹100
நீரின்றி அமையாது உலகு
-4 % Out Of Stock
பஞ்ச பூதங்களாலான மனித உடல் சமூகப் பண்பாட்டுக் காரணகாரிய மதிப்பீடுகளை வழிநடத்தும், செயல்படுத்தும், கடத்தும் ஊடகமாக மாறியிருக்கிறது. இவற்றின் வன்முறைகளிலிருந்து எளிய மனித உடலை மீட்டு அதன் இயற்கை விதிகளுக்கு ஆட்பட்ட பேரியக்கத்தில் ஒன்றவிடும் எத்தனிப்பாக இத்தொகுப்பின் கவிதையியல் கட்டமைகிறது...
₹67 ₹70
நீர் பிறக்குமுன்
-5 % Out Of Stock
ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலராக இருந்த இந்திரா, தனது பகுதியிலுள்ள தலித் மக்களின் பதினைந்தாண்டு காலக் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண மேற்கொண்ட நேர்மையான, சாத்வீகமான தொடர் போராட்டத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கும் நூல். அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தனது உறவினர்களின் நேரடியான, மறைமுக..
₹57 ₹60
நீர் வளர் ஆம்பல்
-5 %
அவித்த உருளைக் கிழங்கின் வாசனையுடன் பெய்யும் பெரு மழையிடம் ஒதுக்குப்புறமான எனது இருப்பிடத்தை நீ எப்படி அறிந்தாய் என உசாவும் இந்தக் கவிதைகள் தனது சின்னஞ்சிறு கைகளால் யாதொரு பேதமுமின்றி உலகத்தைத் தழுவிக்கொள்ளும் வாஞ்சை கொண்டவை. நிலத்தின் பண்பாட்டுத் தளங்களை அதிகாரத்துக்கெதிரான ஆடுகளமாக்கச் சித்தங் கொண..
₹114 ₹120
நீர் விளையாட்டு
-5 % Out Of Stock
வாழ்வின் பல்வேறு அடுக்குகளிலும் தான் எதிர்கொண்ட அனுபவங்களைச் சிடுக்குகளற்ற கதைகளாக்கியுள்ளார் பெருமாள்முருகன். தமிழ்க் கதையுலகம் இதுவரை தொடத்தயங்கிய சில கூறுகளை அனாயசமாகக் கையாண்டு, தமிழ் இலக்கியத்தின் எல்லையைத் தன்னளவில் விரிவுபடுத்தும் பெருமாள்முருகன், சொற்களை மீறிய மனித மனோபாவங்களை வாசகர்களு..
₹119 ₹125
நீர்ச்சறுக்கல்
-5 %
அறிந்ததின்மீது அதிருப்தி இருந்தாலும் அறியாததின் மீதுள்ள பயத்தால் அறிந்ததை இறுகப் பற்றிக்கொள்ளும் தன்மை இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் உணரக் கிடைக்கிறது. இனம்புரியாத அவஸ்தையின் நீட்சி என்றும் இந்தக் கவிதைகளைச் சொல்லலாம். இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் முதல் தொகுப்புக்கான சலுகையைக் கோராதவை...
₹57 ₹60
நீர்மாலை
-5 %
ஒரு ஐம்பது சொற்கூட்டங்கள் சேர்ந்து உண்டாக்கக்கூடிய உணர்ச்சியை, சுயம்புலிங்கத்தின் ஒரு சொல் உருவாக்கிவிடுகிறது. முன்னூற்றிச் சொச்சம் சொற்களுக்குள் ஒரு திடகாத்திரமான கதையை அவரால் படைத்துவிடவும் முடிகிறது. தவலைப் பானையின் குடிநீரைப் போல அந்தக் கதையின் ஒரு சொல்கூடத் தழும்பிச் சிதறுவதில்லை. வர்க்கப..
₹119 ₹125
நீல மிடறு
-5 %
இலக்கியத்தில் முதலும் முடிவுமான கச்சாப்பொருளும் அதனை வனைந்து வார்த்தெடுக்கும் களமும் மனித மனம்தான். அதன் ஆழத்துப் புதிர்களும் அவிழ்க்கவொண்ணா முடிச்சுகளும் அடங்கியிருக்கும் இருள்வெளியினின்றும் துளியேனும் தொட்டெடுத்துத் துலக்கிக் காட்டுவதில்தான் படைப்பின் பெறுமதி அடங்கியுள்ளது. இத்தொகுப்பிலுள்ள லாவண்ய..
₹171 ₹180
நீலப் பொருளாதாரம்
-5 %
கடல்சார் வாழ்வை உயிரோட்டமாய்த் தன் படைப்புகளில் தந்திருக்கும் ஜோ டி குருஸ் கடலோரப் பொருளாதாரம் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். துறைமுகங்களின் உள்கட்டமைப்பு, சரக்குப் போக்குவரத்து, மீன்வளப் பாதுகாப்பு ஆகியவை குறித்த முக்கியமான சிந்தனைகளையும் யோசனைகளையும் முன்வைக்கிறார் ஜோ டி குருஸ். கர..
₹276 ₹290
நீலி
-5 % Out Of Stock
தனக்கேயான கவிதை மொழியைக் கண்டடைந்து எழுதிவரும் மாலதி மைத்ரியின் மூன்றாவது கவிதைத் தொகுதி இது. ஒரு பார்வையாளரின் வெளிப்பாடுகளாக அல்லாமல் பங்கேற் பாளரின் அனுபவங்களாகவே இவரது கவிதைகள் அமைந் துள்ளன. அகமன வோட்டங்களை மட்டுமல்லாமல் சமூகப் பார்வையையும் கவிதையாக்குவதில் திறன் கொண்டவர். குறுகிய காலத்துக் ..
₹71 ₹75
நீளா
-4 %
குறுங்கதைகளே கவிதைகள் என்று ஆகிவிட்ட காலத்தில் உணர்வுகளின் சலனங்களைத் துல்லியம் குறையாமல் பதிவு செய்கிறது ‘நீளா’. தமிழ் நவீன கவிதையின் வழமையான சொற்றொடர்களை உதிர்த்து புத்தெழுச்சியான அழைப்புகளையும் தொனிகளையும் ஏற்கிறது. தயக்கமான கவித்துவத்தைக் கடக்கிறது. பெண் பாலிமையின் இயல்புகளையும் ஊக்கங்களையும்..
₹67 ₹70
நீள் தினம்
-5 %
அன்றாட கவனிப்பில் பிடிபடும் எளிய கணநேர நிகழ்வுகளைச் சொல்பவை பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகள். நிகழ்வுகளைச் சொல்லும்போதும் சொல்லைக் கடந்த மனநிலையை வாசகனிடம் உருவாக்க முயற்சி செய்கிறார். ‘இன்றைக்கும், எப்போதும் பெரும் காதலுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நாளைக்கும் இடையில் வந்து விழும்’ கவிதை நிகழ்வுகள..
₹57 ₹60
Showing 841 to 852 of 1274 (107 Pages)